Thursday, December 17, 2009

நானே கேள்வி? நானே பதில்!

இந்தியா, உலகின் மிக பெரிய ஜனநாயக நாடா?



இந்தியா, உலகின் மிக பெரிய ஜனநாயக நாடு என்பதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இருக்காது. ஆனால் ஜனநாயகத்தில் போட்டியிடும் தேசிய கட்சி முதல் மாநில கட்சி வரை கட்சிகளில் ஜனநாயகம் இருக்கிறாதா என்பது தான் சந்தேகம். உதாரணத்திற்கு இந்தியா சுகந்திரம் பெற்றது முதல் காங்கிரஸின் தலைவர்கள் நேருவின் தலைமுறையின்றே !. ஒ.. அதனால் தான்ரொ ஜனநாயகத்தை மக்களாட்சி... (தம்) மக்களாட்சி... என்கிறரோ.
-------------------------------------------------------------------------------------

ஒரு எறும்பு தான் எடையை விட எட்டு மடங்கு எடை வலுவை தூக்குமாமே, இதனை விட வேறு எதேனும் இனம் தூக்குமா?



ஏன் இல்லை, மனித இனம் இருக்கிறதே, அதிலும் நம் தமிழ் இனம் இருக்கிறதே! வெறும் 20 இலட்சம் ஈழ மக்கள், 8 கோடி உலக தமிழ் மக்களின்(40 மடங்கு) மானத்தை தூக்கி நிற்கின்றனரே.
------------------------------------------------------------------------------------

கலைஞர் பிரபாகாரனை சர்வாதிகாரி என்கிறாரே?



திராவிட முன்னேற்ற கழகம் என்ற தி.மு.க-வை தி.ருவாரூர் மு. க.ருணாநிதி என்று ஆக்கியவரும், கட்சியே குடும்பம் என்பதை குடும்பமே கட்சி என்று ஆக்கிய கலைஞரை தொண்டர்கள் அழைக்கின்றனர் "ஜனநாயகவாதி" என்று ? ? ?.
-----------------------------------------------------------------------------------

இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை(secular) நாடு என்கீன்றினரே அப்படி என்றால் என்ன?



தமிழ்நாட்டின் அன்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரா, தமிழ்நாடுக்கு தண்ணிர் விடுவதில் வெற்றுமையில் ஒற்றுமையாக இருக்கின்றான அல்லவா அதனால் தான் இந்தியாவை வேற்றுமையில் ஒற்றுமை(secular) நாடு என்கீன்றனர்.

No comments:

Post a Comment